1. Home
  2. தமிழ்நாடு

#BIG NEWS : வரும் 19 ஆம் தேதி முதல் டாஸ்மாக் கடைகளில் இந்த திட்டம் அமல்..!

1

தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் மதுபான கடைகளை தமிழ்நாடு வாணிப கழகம் நடத்தி வருகிறது.இந்நிறுவனம் தமிழ்நாட்டில் மதுபானங்களை மொத்த மற்றும் சில்லறை வர்த்தகம் செய்யும் உரிமைத்தை பெற்றுள்ளது. தமிழ்நாடு அரசின் வருவாய் ஈட்டும் முக்கிய காரணியாக டாஸ்மாக் செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில் நீலகிரி மாவட்டத்திலும், திண்டுக்கல் மாவட்டத்திலும் ஊட்டி, கொடைக்கானல் என சுற்றுலா பயணிகள் பொது இடங்களில் வீசி விட்டும், உடைத்து விட்டும் போட்டுச் செல்கின்ற காலி மதுபான பாட்டில்களால் இயற்கை சூழலுக்கும் வனவிலங்குகளுக்கும் ஏற்படும் பாதிப்பை தடுக்கும் வகையில் சென்னை உயர்நீதிமன்றம் டாஸ்மாக் மதுபான பாட்டில்களை திரும்ப பெறும் திட்டத்தை நடைமுறைபடுத்த உத்திரவிட்டது.இந்த திட்டம் நீலகிரியில் வெற்றிகரமாக அமல்படுத்தப்பட்டது.

மேலும் இத்திட்டத்தை பிற மாவட்டங்களிலும் அமல்படுத்தவும் நீதிமன்றம் அறிவுறுத்தி இருந்தது. இதனையடுத்து கோவை மாவட்டத்தில் கடந்த ஏப்ரல் 1-ம் தேதி முதல் மதுபான கடைகளில் விற்பனை செய்யப்படும் மது பாட்டில்களுக்கு கூடுதலாக 10 ரூபாய் பெறப்படும் எனவும், இதற்கான ஸ்டிக்கர் மது பாட்டிலிலேயே ஒட்டப்பட்டு விற்பனை செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காலி மதுபான பாட்டில்களை மீண்டும் டாஸ்மாக் கடைகளில் ஒப்படைத்து 10 ரூபாய் பணத்தை திரும்ப பெற்றுக் கொள்ளலாம் எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஜனவரி 19ஆம் தேதி முதல் டாஸ்மாக் கடைகளில் காலி மதுபாட்டில் திரும்ப பெறும் திட்டம் அமல்படுத்தப்படுகிறது. திருவாரூர், நாகை, குமரி, தேனி, தருமபுரி ஆகிய மாவட்ட டாஸ்மாக் கடைகளில், மதுபான விலையுடன் கூடுதலாக ரூ.10 பெற்றுக்கொள்ளப்படும். காலி மதுபாட்டில்களை டாஸ்மாக் கடைகளில் மீண்டும் ஒப்படைத்து, கூடுதலாக கொடுத்த ரூ.10ஐ பெற்றுக் கொள்ளலாம். இதுதொடர்பாக டாஸ்மாக் பணியாளர்களுக்கு உத்தரவு பறந்துள்ளது. 

Trending News

Latest News

You May Like