1. Home
  2. தமிழ்நாடு

#BIG NEWS : ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகள் திடீர் துப்பாக்கிச்சூடு..ஒருவர் பலி... 7 பேர் காயம்...!

Q

காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட உடன் அங்குச் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் காஷ்மீருக்கு சுற்றுலா சென்று வருகிறார்கள்.

அதேநேரம் வெளிமாநிலங்களில் இருந்து வருவோரைக் குறிவைத்து நடத்தப்படும் தாக்குதல்களும் அதிகரித்துள்ளன. அதாவது காஷ்மீரில் உள்ள புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், சுற்றுலாப் பயணிகள் ஆகியோரை குறிவைத்து நடத்தப்படும் தாக்குதல் சம்பவங்கள் அங்குத் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 

ஜம்மு- காஷ்மீரின் பஹல்காமில் உள்ள பைசரன் மலைக்கு டிரக்கிங் சென்ற சுற்றுலாப் பயணிகள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தியுள்ளனர். பயங்கரவாதிகளின் துப்பாக்கிச் சூட்டில் ஒரு சுற்றுலாப் பயணி கொல்லப்பட்டார். மேலும், ஏழு பேர் காயமடைந்தனர்.

மலையேற்றத்திற்காகச் சென்ற சுற்றுலாப் பயணிகள் மீது அடையாளம் தெரியாத தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகத் தெரிகிறது. பஹல்காமின் பைசரன் பள்ளத்தாக்கின் மேலே உள்ள புல்வெளிகளில் இந்தத் துப்பாக்கிச் சூடு நடந்துள்ளன. அந்தப் பகுதிக்கு நடந்து அல்லது குதிரை மீது மட்டுமே செல்ல முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

மறைந்திருந்த பயங்கரவாதிகள் சுற்றுலாப் பயணிகள் வரும் வரை காத்திருந்து தாக்குதல் நடத்தியுள்ளனர். அதாவது இது முன்கூட்டியே திட்டமிடப்பட்ட தாக்குதல் என போலீசார் சந்தேகிக்கிறார்கள். இந்தத் தாக்குதல் இன்று பிற்பகல் 2:30 மணிக்கு நடந்ததாக ஜம்மு-காஷ்மீர் காவல்துறை தெரிவித்துள்ளது. துப்பாக்கிச்சூட்டைத் தொடர்ந்து பஹல்காமில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 

Trending News

Latest News

You May Like