#BIG NEWS: தமிழ் நடிகை பெங்களூர் ஏர்போர்ட்டில் கைது..!

கன்னட மொழியில் நடிகர் கிச்சா சுதீப்பின் மாணிக்யா என்ற படத்தில் நடிகையாக அறிமுகம் ஆனார் கர்நாடகாவை சேர்ந்தவர் ரன்யா ராவ்.இவர் 'வாகா' திரைப்படத்தில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக நடித்தவர்.
இந்நிலையில் தான் ரன்யா ராவ் துபாயில் இருந்து பெங்களூருக்கு எமிரேட்ஸ் விமானத்தில் நேற்று புறப்பட்டார். அவர் வந்த விமானம் நள்ளிரவில் பெங்களூர் தேவனஹள்ளியில் உள்ள கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் வந்து தரையிறங்கியது. அப்போது அவர் தனது உடலில் அதிகப்படியான நகையை அணிந்திருந்தார். இதனால் சந்தேகம் அடைந்த டிஆர்ஐ எனும் வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள் அவரை பிடித்து விசாரித்தனர்.
இந்நிலையில், தங்கக்கடத்தலில் ஈடுபட்டதாக பெங்களூரு விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். அப்போது, அவரிடம் இருந்து 14.8 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
அவர் எப்படி அதிகாரிகளிடம் சிக்கினார்?
அதாவது கடந்த 15 நாளில் மட்டும் ரன்யா ராவ் 4 முறை துபாய் சென்று வந்துள்ளார். இதனால் அவரது நடத்தையில் சந்தேகம் கிளம்பியது. இதையடுத்து தான் நேற்று நள்ளிரவில் துபாயில் இருந்து வந்த அவரிடம் நடத்திய சோதனையில் 14.8 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இதனால் ரன்யா ராவ் அடிக்கடி தங்கம் கடத்தலில் ஈடுபட்டு இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அதுமட்டுமின்றி அவர் பின்னணியில் இன்னும் வேறு பல நபர்கள் இருக்கலாம் என்ற அதிகாரிகள் நினைக்கின்றனர். இதுபற்றி வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள் தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது கைது செய்யப்பட்டுள்ள ரன்யா ராவ் கடந்த 1993 மே 28 ம் தேதி கர்நாடகாவின் சிக்கமகளூரில் பிறந்தார். இவரது தந்தை ஐபிஎஸ் அதிகாரியாக என்றும், அவர் கர்நாடகாவில் ஏடிஜிபியாக பணியாற்றி வருகிறார் என்ற முக்கிய தகவலும் வெளியாகி உள்ளது.