1. Home
  2. தமிழ்நாடு

#BIG NEWS : பிப்ரவரி 20ம் தேதி முதல் வேலைநிறுத்தம் அறிவிப்பு..!

1

சென்னையில் அண்ணா தொழிற்சங்கத்தின் தலைமையின் கீழ் செயல்படும் கூட்டமைப்பு சங்கங்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் தேமுதிக மற்றும் புரட்சி பாரதம் உள்ளிட்ட 22 சங்கங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

அந்த ஆலோசனை கூட்டம் முடிந்த பிறகு செய்தியாளர்களை சந்தித்து அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் ஆர் கமலக்கண்ணன் பேசினார். அப்போது அவர் கூறுகையில் பிப்ரவரி 5ஆம் தேதி போக்குவரத்துச் செயலரை சந்தித்து வேலைநிறுத்தம் நோட்டீஸ் வழங்க உள்ளோம்.

பிப்ரவரி இருபதாம் தேதி முதல் எந்த நேரத்திலும் வேலை நிறுத்தம் நடைபெறும் எனவும் தெரிவித்துள்ளார். தொமுசவை தவிர்த்து அனைத்து சங்கங்களையும் ஒருங்கிணைத்து போராட்டத்தில் ஈடுபட இருப்பதாகவும் தெரிவித்தார். அதிமுக ஆட்சியில் இருந்த பொழுது 3 ஆண்டு காலமாக இருந்த ஒப்பந்த காலத்தை நான்கு ஆண்டுகளாக மாற்றினார்கள்.

தற்போது ஆறாம் ஆண்டை கடந்தும் ஊதிய பேச்சுவார்த்தை என்பது நடைபெறவில்லை ஓய்வூதியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு, பணப்பலன் வழங்கப்படவில்லை நடத்தி 51 சதவீதம் வாக்குப்பெறும் சங்கத்தை பேச்சுவார்த்தைக்கு அழைக்க வேண்டும் என உயர் நீதிமன்றத்தில் ஆளுங்கட்சி தொழிற்சங்கம் உத்தரவு பெற்று வைத்துள்ளனர்.

இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் அண்ணா தொழிற்சங்கம் தொடர்ந்து வழக்கு நிலுவையில் இருக்கிறது. அனைத்து சங்கங்களையும் இணைத்து பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும் எனவும் தெரிவித்தார். அதன் பிறகு அங்கீகார தேர்தல் நடத்தப்பட்டு ஊதிய உயர்வு வழங்குவதை தவிர்க்க அங்கீகார தேர்தல் போன்ற நடவடிக்கைகளை கையில் எடுத்துள்ளனர். பல்வேறு விஷயங்களை முன்னிறுத்தி பிப்ரவரி 20ஆம் தேதி முதல் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் போக்குவரத்துதொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவதாகவும் அறிவித்துள்ளார்.

Trending News

Latest News

You May Like