1. Home
  2. தமிழ்நாடு

#BIG NEWS : ஶ்ரீலஶ்ரீ சிதம்பர மௌன சுந்தரமூர்த்தி சுவாமிகள் காலமானார்..!

1

மௌன மடத்தின் மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ மௌன சுந்தரமூர்த்தி சுவாமிகள் (76) இன்று காலமானார். 

சிதம்பரம் சீர்காழி செல்லும் சாலையில் சபாநாயகர் தெருவில் அமைந்துள்ள மௌனமடத்தின் மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ மௌன சுந்தரமூர்த்தி சுவாமிகள் (76) செவ்வாய்க்கிழமை அதிகாலை காலமானார்.

பத்து வயது சிறுவனாக இருக்கும் போதே சிதம்பரம் மௌன மடத்திற்கு இவர் வந்துவிட்டார். அதன் பின் இவர் பள்ளி கல்லூரி படித்து முடித்துவிட்டு 1981ம் ஆண்டு முதல் மௌன மடத்தின் மடாதிபதியானார். இவர் தருமையாதீனத்தின் மீது மிகுந்த ஈடுபாடு உடையவர். தமிழ் நூல்கள் பயின்று ஆசிரியராக பணியாற்றிய இவர் நல்ல இலக்கிய சிந்தனை பேச்சாளர். மேலும் தாமே மடத்தின் வயல்களுக்கு சென்று விவசாயம் கவனித்து பசு பராமரிப்பு செய்து வந்தார். கிருத்திகைதோறும் வைத்தீஸ்வரன்கோயில் அபிஷேகத்திற்கு பால் வழங்கியும், பசு வழங்கியும் மகிழ்ந்தவர்.  தில்லை திருவிழாக்காலத்தில் திருமடத்தில் அடியார்கட்கு அன்னம்பாலிப்பு செய்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவருடைய மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Trending News

Latest News

You May Like