1. Home
  2. தமிழ்நாடு

#BIG NEWS : செந்தில் பாலாஜியின் ஜாமின் மனு 3வது முறையாக தள்ளுபடி..!

1

சட்டவிரோத பணப்பரிமாற்றத் தடைச் சட்ட வழக்கில்,கடந்த ஜூன் மாதம் அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி, சென்னையில் உள்ள புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் சென்னை முதன்மை நீதிமன்றம், சென்னை உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனுக்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டன. ஜாமீன் தொடர்பாக மீண்டும் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தை நாடும்படி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து செந்தில் பாலாஜி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மீண்டும் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார்.

இந்த நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமின் மனு 3வது முறையாக தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமின் மனுவை 3வது முறையாக தள்ளுபடி செய்து, சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி உத்தரவிட்டுள்ளார். அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் 15ஆவது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது. அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் ஜனவரி 22ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like