#BIG NEWS: நிர்வாகியை கன்னத்தில் அறைந்த ராஜேந்திர பாலாஜி..!

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 77-வது பிறந்தநாளையொட்டி, விருதுநகர் தேசபந்து மைதானத்தில் அதிமுக பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் ராஜேந்திர பாலாஜி, மாஃபா பாண்டிராஜன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இந்த பொதுக்கூட்டத்தில் அதிமுக நிர்வாகிகள் அவருக்கு பொன்னாடை அணிவிக்க மேடைக்கு வந்தனர். வரிசையில் வராமல் முண்டியடித்துக் கொண்டு வந்ததால் ஆத்திரமடைந்த ராஜேந்திர பாலாஜி, விருதுநகர் மாவட்ட எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர் நந்தகுமாரை ‘பளார்’ என கன்னத்தில் அறைந்தார். இந்த காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.