1. Home
  2. தமிழ்நாடு

#BIG NEWS : தமிழக அமைச்சரவை விரைவில் மாற்றம்?மீண்டும் அதிகாரத்தில் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்!

Q

தமிழக அமைச்சரவையில் விரைவில் மாற்றம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழக அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட வேண்டிய சூழ்நிலைக்கு தமிழக அரசு தள்ளப்பட்டுள்ளது. சட்ட விரோத பண பரிமாற்ற வழக்கில் செந்தில் பாலாஜியும் சொத்து குறிப்பு வழகில் பொன்முடியும் ஏற்கனவே அமைச்சர் பதவியை இழந்தனர்.
அமைச்சர் பதவியை இழந்த செந்தில் பாலாஜிக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. ஜாமீனில் வெளியே வந்த அடுத்த ஓரிரு நாட்களில் அமைச்சராக பதவியேற்றார் செந்தில் பாலாஜி. இந்நிலையில் செந்தில் பாலாஜி வழக்கை நேற்று விசாரித்த உச்சநீதிமன்றம் உங்களுக்கு ஜாமீன் கொடுத்தது எங்கள் தவறு என கடும் கண்டனம் தெரிவித்தது.
மேலும் ஜாமீன் வேண்டுமா அல்லது அமைச்சர் பதவி வேண்டுமா எனவும் பதிலளிக்க கெடு விதித்துள்ளது. இதனால் அமைச்சர் செந்தில் பாலாஜி தாமாகவே தனது பதவியை ராஜினாமா செய்வார் என கூறப்படுகிறது. இதனால் அவரது இலாகாக்கள் தங்கம் தென்னரசு அல்லது முத்துச்சாமிக்கு வழங்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
இதேபோல் சர்ச்சைப் பேச்சு விவகாரத்தில் பொன்முடியின் சர்ச்சைப் பேச்சுக்கும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. சைவம் மற்றும் வைணவம் மதங்கள் குறித்து ஆபாசமாக பேசியிருந்தார் அமைச்சர் பொன்முடி. இதையடுத்து அவர் மீது கட்சி நடவடிக்கை பாய்ந்து, திமுக துணைப் பொதுச் செயலாளர் பதவி பறிக்கப்பட்டது. இந்நிலையில் பொன்முடியை அமைச்சர் பதவியில் இருந்தும் நீக்க வேண்டும் எனவும் குரல்கள் வலுத்து வருகின்றன.
பொன்முடியின் பேச்சுக்கு சென்னை உயர்நீதிமன்றமும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பான வழக்கும் விசாரணையில் உள்ளது. இதனால் பொன்முடியின் அமைச்சர் பதவிக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. அதேநேரத்தில் பொன்முடியின் பேச்சுக்கு எழும்பும் எதிர்ப்புகளால் கட்சி தலைமையே அவரின் பதவியை பறிக்கும் முடிவில் உள்ளதாகவும் கூறப்படுகிறது.
அதேநேரம் அதிருப்தியில் உள்ள அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனை மீண்டும் அதிகாரத்திற்கு கொண்டு வரவும் முதல்வர் ஸ்டாலின் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் இந்த விவகாரங்களில் விரைவில் தமிழக அமைச்சரவையில் மாற்றம் இருக்கலாம் என கூறப்படுகிறது.

Trending News

Latest News

You May Like