1. Home
  2. தமிழ்நாடு

#BIG NEWS : அதிமுக கூட்டணியில் இருந்து பாமக வெளியேறியது..?

1

நெய்வேலி என்.எல்.சி முற்றுகைப் போராட்டத்தின் போது பாமகவினர் பொது அமைதிக்கு எதிராக செயல்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு நெல்லை பாளையங்கோட்டை சிறைச்சாலையில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.

பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாமகவினரை அக்கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் நேரில் சந்தித்தார்.தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அன்புமணி ராமதாஸ், “என்எல்சிக்கு எதிரான போராட்டத்தில் 55 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர், அவர்கள் மீது கடுமையான சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையை வன்மையாக கண்டிக்கிறோம், இவர்கள் யாரும் எந்த தவறும் செய்யாதவர்கள். நெய்வேலியில் இருந்து என்எல்சி வெளியேற வேண்டும். இந்த விவகாரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலளிக்க வேண்டும். 

மேலும், தமிழ்நாட்டில் அதிமுகவுடன் பாமக கூட்டணியில் இல்லை என அதிமுகவிற்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ். 'தேசிய அளவிலான தேசிய ஜனநாயக் கூட்டணியில் மட்டுமே இருக்கிறோம், தமிழ்நாட்டில் யாருடனும் கூட்டணியில் இல்லை' என அவர் கூறியுள்ளார். பாமகவின் இந்த நிலைப்பாடு அதிமுகவினரை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது அதிமுகவுக்கு மேலும் பின்னடைவை கொடுக்கும் என கூறப்படுகிறது.

Trending News

Latest News

You May Like