1. Home
  2. தமிழ்நாடு

#BIG NEWS : பிரதமர் மோடி திறந்து வைத்த அடல் சேது பாலத்தில் மிகப்பெரிய விரிசல்..! மக்கள் அதிர்ச்சி..!

1

மும்பை டிரான்ஸ் துறைமுக இணைப்புச் சாலை அல்லது அடல் சேது பாலம் என அழைக்கப்படும் இந்த 21 கி.மீ நீளமுள்ள பாலம் கடந்த ஜனவரி தான் பிரதமர் நரேந்திர மோடி அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. இது இந்தியாவின் மிக நீளமான கடல் பாலம் என்பதோடு பொறியியல் அதிசயம் என்றே சொல்லலாம். அந்தளவிற்கு அதிநவீன தொழில்நுட்பங்கள் பயன்படுத்தி இந்தப் பாலம் கட்டப்பட்டுள்ளது. மும்பை பகுதியில் உள்ள போக்குவரத்தை நிச்சயம் இது மாற்றியமைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. 

இந்நிலையில், மகாராஷ்டிரா காங்கிரஸ் தலைவர் நானா படோல் இன்று அடல் சேது பாலம் பார்வையிட்டார். அப்போது அங்க இருந்த விரிசல்களை பார்த்து "கடந்த ஜனவரி மாதம் பிரதமர் மோடி திறந்து வைத்த மும்பை அடல் சேது பாலம், அது எதிர்கொண்ட முதல் பருவமழையிலேயே விரிசல் ஏற்பட்டுள்ளது மிகவும் கவலையளிக்கிறது. ஏராளமான விரிசல்கள் பயணிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 

பீகாரில் புதிதாக கட்டப்பட்ட பாலம் சமீபத்தில் இடிந்து விழுந்தது. தற்போது, மும்பையிலும் இந்த அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளதால் அரசின் பணி மீது பல கேள்விகள் எழுந்துள்ளன. காங்கிரஸ் கட்சியின் போராட்டத்தின் ஒரு பகுதியாக அரசின் ஊழல் நடவடிக்கைகளை அம்பலப்படுத்துவதற்காக எனது சகாக்களுடன் இந்தப் பாலத்தை ஆய்வு செய்தேன். இந்த விவகாரம் மிகவும் தீவிரமானது, மாண்புமிகு உயர்நீதிமன்றம் உடனடியாக கவனத்தில் எடுத்து இந்த விவகாரத்தை விசாரிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம் என்றார். 


 

Trending News

Latest News

You May Like