#BIG NEWS : இந்தியாவிடம் சிக்கிய பாகிஸ்தான் விமானி..!

பாகிஸ்தான் தொடர் அத்துமீறலை அடுத்து பாகிஸ்தான் மீதான தாக்குதலை இந்தியா தீவிரப்படுத்தியுள்ளது. இந்தியாவின் ஜம்மு, பதான்கோட், உதம்பூரில் சர்வதேச எல்லைகளை குறிவைத்து, பாக்., நடத்தி வருகிறது. இன்று,இரவு 9 அளவில் பாகிஸ்தான் ஏவுகணை மற்றும் டிரோன் மூலம் தாக்குதல் முயற்சி செய்தது. ஆனால் இந்திய ராணுவம் அதனை முறியடித்து தோல்வியடைய செய்தது. இந்த திட்டத்தில் அதிநவீன S-400 வான்பாதுகாப்பு அமைப்பு பயன்படுத்தப்பட்டது.
தொடர்ந்து மீண்டும் ஜம்மு பகுதியில் பாகிஸ்தான் இராணுவம் டிரோன் தாக்குதல் நடத்த முயன்றது.அப்போது கட்ரா, வைஷ்ணோ தேவி கோவில், தெற்கு காந்திநகர் உள்ளிட்ட பகுதிகள் குறிவைக்கப்பட்டன. ஆனால் இந்தியா அதனை முற்றிலும் முறியடித்தது.
இதனையடுத்து ஜம்மு விமான நிலையம், பஞ்சாப் பதன்கோட் விமான தளம் ஆகிய இடங்களும் இலக்காக தேர்ந்தெடுக்கப்பட்டு பாகிஸ்தான் இராணுவம் டிரோன் தாக்குதலை நடத்தியது. அப்போது இந்திய விமானப்படை உடனடியாக பதிலடி தாக்குதலை நிகழ்த்தியது. இதற்கும் S-400 வான்பாதுகாப்பு அமைப்பு முக்கிய பங்கு வகித்தது.
இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மர் பகுதிக்குள் ஊடுருவிய, பாகிஸ்தான் ‛எப் 16' ரக விமானத்தை இந்தியா சுட்டு வீழ்த்தியது. இதில் இருந்து உயிர் தப்பிய, பாகிஸ்தானைச் சேர்ந்த அந்த போர்விமானத்தின் விமானி, இந்திய ராணுவத்தால் சிறை பிடிக்கப்பட்டுள்ளார்.
மேலும் பாதுகாப்பு நடவடிக்கையாக, ஜம்மு & காஷ்மீர், குஜராத், பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முழு பிளாக்அவுட் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் மற்றும் லாகூர் நகரங்களிலும் இந்தியா எதிர் தாக்குதலை துவக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.