1. Home
  2. தமிழ்நாடு

#BIG NEWS : போர் நிறுத்தத்திற்கு தயார் - பாகிஸ்தான்..!

Q

பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்சர் கவாஜா ஆசிஃப், "பாகிஸ்தான் யுத்தத்தை விரும்பவில்லை. இந்தியாவுக்கு எதிராக எந்தவொரு நடவடிக்கையையும் பாகிஸ்தான் தொடங்காது. தாக்குதலை இந்தியா நிறுத்தினால், நாங்களும் போர் நிறுத்தத்திற்கு தயார்" என தெரிவித்துள்ளார்.

ஒரு செய்தி நிறுவனத்திடம் பேசிய அவர், முடிவெடுக்கும் முக்கியமான அதிகாரம் இந்தியாவிடமே இருக்கிறது என்றும் வலியுறுத்தியுள்ளார்.

இதற்கு முன், அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மார்கோ ரூபோயி, இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருடன் பேசினார். இந்தியா-பாகிஸ்தான் இடையிலான பதற்றத்தை குறைக்க வேண்டியது முக்கியம் எனவும், அமைதிக்கான வழிகளை நாட வேண்டும் என்றும் அவர் கூறினார்.

பின்னர், மார்கோ ரூபோயி பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் இஷாக் தார்-உடனும் தொலைபேசியில் உரையாடினார். அந்த உரையாடலிலும் இஷாக் தார் இதே கருத்தை வலியுறுத்தியதாக கூறுகின்றன. தகவல்கள்

"இந்தியாவின் தொடர்ச்சியான தாக்குதலால் நாங்கள் பொறுமையை இழந்தோம். ஆகையால் எதிர்வினை காண்பிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. ஆனால் இந்தியா தாக்குதலை நிறுத்தினால் நாங்களும் அமைதியை பரிசீலிக்க தயாராக உள்ளோம்" என்று அவர் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலைமைக்கு ஒருங்கிணைந்த முயற்சிகள் மூலம் தீர்வு காணப்பட வேண்டியது முக்கியம் எனும் பார்வை உலக நாடுகளிடையே உருவாகியுள்ளது.

Trending News

Latest News

You May Like