1. Home
  2. தமிழ்நாடு

#BIG NEWS : ராஜஸ்தானில் ஆசிட் தொழிற்சாலையில் நைட்ரஜன் வாயுக் கசிவு..!உரிமையாளர் மற்றும் தொழிலாளி உயிரிழப்பு..!

Q

ராஜஸ்தானின் பீவாரில் உள்ள ஒரு அமில தொழிற்சாலையில் ஏற்பட்ட நைட்ரஜன் வாயு கசிவில் தொழிற்சாலை உரிமையாளர் உட்பட இரண்டு பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனர்.

திங்கள்கிழமை மாலை 51வது வார்டில், தொழிற்சாலையின் கிடங்கிற்குள் நைட்ரஜன் வாயுவை டேங்கர் லாரி ஒன்று நிரப்பிக் கொண்டிருந்தபோது இந்த சம்பவம் நிகழ்ந்தது.

தொழிற்சாலை உரிமையாளர் சுனில் சிங்கால் திங்கள்கிழமை இரவு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்தனர். அஜ்மீரில் உள்ள ஜேஎல்என் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தொழிற்சாலையின் தொழிலாளி ஜிதேந்திர சோலங்கி இன்று காலை உயிரிழந்தார்.

இதுவரை, 45 பேர் உள்ளூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

முன்னெச்சரிக்கையாக ஆலையை சுற்றி வசிப்பவர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

Trending News

Latest News

You May Like