#BIG NEWS : அமைச்சர் அன்பில் மகேஷ் பெங்களூரு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்படுகிறார்..!

பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று காலை சேலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளிகளுக்கு நடப்பு ஆண்டுக்கான அனுமதி ஆணையை வழங்கினார்.
இதனை அடுத்து கிருஷ்ணகிரியில் நடைபெறும் விழாவிற்காக தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் வழியாக செல்லும் போது திடீரென உடல் நல குறைவு ஏற்பட்டது. இதனையடுத்து உடனடியாக அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
முதற்கட்ட பரிசோதனையில் அமைச்சருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அமைச்சர் அன்பில் மகேஷ் பெங்களூருவில் உள்ள இருதாலையா மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்படுகிறார்.
அமைச்சர் அன்பில் மகேஷ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தகவல் அறிந்து திமுகவினர் உள்ளிட்டோர் மருத்துவமனை முன்பு திரண்டனர். இதனால் பகுதியில் சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.