#BIG NEWS : ‘இந்தியா' கூட்டணியின் தலைவராக மல்லிகார்ஜுன கார்கே தேர்வு!
![1](https://newstm.in/static/c1e/client/106785/uploaded/9b1816efcac2aadc5c613fb36500dc9a.jpg?width=836&height=470&resizemode=4)
நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்வதற்காக காங்கிரஸ், ஆம் ஆத்மி, திரிணாமுல், திமுக, ஐக்கிய ஜனதா தளம் உள்ளிட்ட 28 கட்சிகள் ஒன்றிணைந்து இந்தியா கூட்டணியை அமைத்துள்ளனர்.இந்தியா கூட்டணி கட்சிகளின் சார்பாக தொடர்ந்து ஆலோசனை கூட்டமானது நடைபெற்று வருகிறது. அந்தவகையில், கடந்த டிசம்பர் 19-ஆம் தேதி டெல்லியில் இந்தியா கூட்டணி கட்சிகளின் நான்காவது ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இந்தநிலையில், இந்தியா கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டம் காணொலி காட்சி வாயிலாக இன்று நடைபெற்று வருகிறது.இந்த ஆலோசனை கூட்டத்தில் காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, திமுக தலைவர் ஸ்டாலின், திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி, தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத்பவார், ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி தலைவர் லாலு பிரசாத் யாதவ், பிகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.
நாடாளுமன்ற தேர்தல் தொகுதி பங்கீடு, இந்தியா கூட்டணியின் ஒருங்கிணைப்பாளரை நியமிப்பது, நாடாளுமன்ற தேர்தல் பரப்புரையை தொடங்குவது உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக இந்த ஆலோசனை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
இந்நிலையில் எதிர்க்கட்சிகளின் ‘இந்தியா' கூட்டணியின் தலைவராக மல்லிகார்ஜுன கார்கே தேர்வு என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.மேலும் இந்தியா கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் பொறுப்பை பிகார் முதல்வர் நிதிஷ் குமார் நிராகரித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது