#BIG NEWS : லெபனான் நாட்டை விட்டு உடனடியாக வெளியேற குடிமக்களுக்கு உத்தரவு!
காஸா மீதான கடுமையானத் தாக்குதலை முடித்துக் கொள்வதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். ஆனால் போர் முடிவுக்கு வரவில்லை என்றும் அவர் விளக்கமளித்துள்ளார்.
மேலும், இஸ்ரேல் ராணுவம் இனி லெபனான் எல்லைக்கு நகர இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதனால் இஸ்ரேல் ராணுவம் அடுத்து லெபனானுடன் போரிட முடிவு செய்துள்ளதாகவே கூறப்படுகிறது.
இந்நிலையில், லெபனானின் ஹெஸ்புல்லா அமைப்புக்கு எதிராக இஸ்ரேல் போர் தொடுக்க உள்ளதாக அறிவித்துள்ள நிலையில், ராணுவ தளவாடங்களை லெபனான் எல்லைக்கு அருகே குவித்து வருகிறது இஸ்ரேல்.
லெபனானை விட்டு வெளியேற தயாராக இருக்கும்படியும், லெபனானுக்கு பயணம் செய்வதை தவிர்க்கவும் தனது குடிமக்களுக்கு அமெரிக்க அரசு ஏற்கனவே அறிவித்தது.
தற்போது கனடா, ரஷ்யா, குவைத், நெதர்லாந்து, ஜெர்மனி, உள்ளிட்ட நாடுகள் லெபனானை விட்டு வெளியேற தங்களது குடிமக்களுக்கு உத்தரவிட்டுள்ளன.