1. Home
  2. தமிழ்நாடு

#BIG NEWS : வரும் 30, 31 தேதிகளில் நீதிமன்றத்தில் ஆஜராகிறார் எடப்பாடி பழனிசாமி..!

1

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் முகாம் அலுவலகமாக செயல்பட்ட கொடநாடு எஸ்டேட் பங்களாவில் நடைபெற்ற கொலை மற்றும் கொள்ளை சம்பவம் 2018ஆம் ஆண்டு பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு தொடர்பு இருப்பதாக பத்திரிகையாளர் மேத்யூ சாமுவேல் டெல்லியில் ஆவணப் படம் ஒன்றை வெளியிட்டார்.

அத்துடன், கொடநாடு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட சயன் மற்றும் வாளையார் மனோஜ் ஆகியோரின் பேட்டியையும் வெளியிட்டு இருந்தார். எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்தபோதே அவர் மீது குற்றம் சாட்டப்பட்டதால் அப்போது இந்த விவகாரம் பரபரப்பாக பேசப்பட்டது.

இதனையடுத்து, கொடநாடு கொலை, கொள்ளை விவகாரத்தில் தனது நற்பெயருக்கும், பதவிக்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையில் செயல்படுவதாகக் கூறி மேத்யூ சாமுவேல் மீது 2019ஆம் ஆண்டு எடப்பாடி பழனிசாமி தரப்பில் 1.10 கோடி ரூபாய் கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் மானநஷ்ட வழக்கு தொடரப்பட்டது. 4 ஆண்டுகளாக நடைபெற்று வரும் இந்த வழக்கில்,சாட்சியங்களை பதிவு செய்யும் வகையில் மாஸ்டர் நீதிமன்றத்துக்கு அனுப்பி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. 

இந்த நிலையில் பத்திரிகையாளர் மேத்யூ சாமுவேலுக்கு எதிராக தொடரப்பட்ட மான நஷ்ட ஈடு வழக்கில், சாட்சியம் அளிக்க வரும் 30, 31 தேதிகளில் நீதிமன்றத்தில் ஆஜராகிறார் எடப்பாடி பழனிசாமி

கால் வலி இருப்பதால் சாட்சியம் அளிக்க வர இயலாது என எடப்பாடி தரப்பு கூறியதை ஏற்காத உயர் நீதிமன்றம், மாஸ்டர் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது . 

Trending News

Latest News

You May Like