1. Home
  2. தமிழ்நாடு

#BIG NEWS : திமுக எம்எல்ஏ மகன் ஆந்திராவில் கைது..!

Q

செங்கல்பட்டு மாவட்டம் பல்லாவரம் தொகுதி
திமுக எம்எல்ஏ கருணாநிதியின் மகன்
ஆண்டோ மதிவாணன். இவரது வீட்டில் வேலை செய்து வந்த சிறுமியை துன்புறுத்தியதாக, ஆண்டோ மதிவாணன் மற்றும் அவரது மனைவி மெர்லினா ஆன் ஆகியோர் மீது இந்திய தண்டனைச் சட்டம், வன்கொடுமை தடுப்புச் சட்டப் பிரிவுகளின் கீழ் நீலாங்கரை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில், தலைமறைவாக உள்ள இருவரையும் பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இன்று மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. மேலும் ஆந்திராவில் பதுங்கியிருந்த ஆண்டோ மதிவாணன் மற்றும் மெர்லினா ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர்.

Trending News

Latest News

You May Like