1. Home
  2. தமிழ்நாடு

#BIG NEWS :- சவுக்கு சங்கருக்கு மே 28ம் தேதி வரை நீதிமன்றம் காவல்..!

Q

காவல்துறை அதிகாரிகள் மற்றும் பெண் போலீசார் குறித்து அவதூறு கருத்து தெரிவித்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில், யூ-டியூபர் சவுக்கு சங்கர், தேனியில் கைது செய்யப்பட்டார். 

சவுக்கு சங்கர் மீது சென்னையில் அடுத்தடுத்து பல வழக்குகள் பதிவானதால் அவரை குண்டர் சட்டத்தில் அடைக்க சென்னை போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய்ரத்தோர் உத்தரவிட்டார்.இந்நிலையில், யூடியூபர் சவுக்கு சங்கரை ஒரு நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க கோவை 4வது குற்றவியல் நீதிமன்றம் நேற்று அனுமதி வழங்கியது.


இதையடுத்து, ஒரு நாள் காவல் இன்றுடன் நிறைவடைந்த நிலையில், செவ்வாய்க்கிழமை மாலை 5 மணிக்கு மீண்டும் சவுக்கு சங்கர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுத்தப்பட்டார். 

தொடர்ந்து, சவுக்கு சங்கரை மே 28 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க கோவை 4-வது குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 

Trending News

Latest News

You May Like