#BIG NEWS : காலை 7.30 மணிக்கே பணிக்கு வரவும் : தமிழக அரசு..!

அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருத்துவர்கள் குறித்த நேரத்திற்கு வர வேண்டும் என்று சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. மருத்துவர்களுக்கான நேர அட்டவணையை வெளியிட்டு சுகாதாரத்துறை செயலாளர் இவ்வாறு உத்தரவு பிறப்பித்துள்ளார். அத்துடன் அரசு மருத்துவமனை முதல்வர்கள், இயக்குநர்கள், சுகாதார பணியாளர்கள் வெளிநோயாளிகளுக்கான நேரத்தை கட்டாயமாக கடைபிடிக்க வேண்டும் என உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புறநோயாளிகள் பிரிவு பொறுப்பு மருத்துவர்கள் காலை 7.30 மணி முதல் பிற்பகல் 12 மணி வரை கட்டாயம் பணியில் இருக்க வேண்டும். பிற மருத்துவர்கள் காலை 9 முதல் மாலை 4 மணி வரை பணியில் கட்டாயம் இருக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
மேலும், அரசு மருத்துவமனை முதல்வர்கள், டீன்கள், மருத்துவ சேவைகள் இணை இயக்குநர் மற்றும் சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் ஆகியோர், வெளிநோயாளிகளுக்கான நேரத்தைக் கட்டாயமாக கடைபிடிப்பதை மாவட்ட ஆட்சியர்கள் உறுதிசெய்ய வேண்டும் என்றும் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.