#BIG NEWS: எடப்பாடியில் தனியார் பள்ளி மாணவர்கள் இடையே நடந்த மோதலில் 9ஆம் வகுப்பு மாணவன் உயிரிழப்பு..!

சேலம் மாவட்டத்தில் உள்ள எடப்பாடி பகுதியில், தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் சுற்றுவட்டார கிராமத்தைச் சேர்ந்த ஏராளமான மாணவ - மாணவியர்கள் பயின்று வருகின்றனர்.
இந்த பள்ளியில் வெள்ளாங்குளம் கிராமத்தைச் சேர்ந்த செல்வம் என்பவரின் மகன் கந்தகுரு (வயது 14), ஒன்பதாம் வகுப்பு பயின்று வருகிறார். இவர் தினமும் பள்ளியின் வாகனத்தில் பயணம் செய்வது வழக்கம்.
இதனிடையே, நேற்று மாலை பள்ளி முடிந்ததும் கந்தகுரு பள்ளி வாகனத்தில் திரும்பி வந்துகொண்டு இருந்தார். அப்போது, வாகனத்தில் கந்தகுருவுக்கும் - சில மாணவர்களுக்கு இடையேயும் மோதல் ஏற்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தில் கந்தகுருவின் கழுத்து, நெஞ்சு பகுதியில் தாக்குதல் நடத்தப்பட்டது. இதனால் நிலைகுலைந்துபோன சிறுவனை, உடனடியாக அங்குள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதி செய்தனர்.
சிறுவனுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தநிலையில், சிகிச்சை பலனின்றி சிறுவன் உயிரிழந்தார். இதனால் தாக்குதல் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர், விசாரணை நடத்தி வருகின்றனர்.