1. Home
  2. தமிழ்நாடு

#BIG NEWS : சந்திரபாபு நாயுடுவுக்கு இடைக்கால ஜாமீன்..!

1

தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபு ஆந்திர முதல்வராக இருந்தபோது, திறன் மேம்பாட்டு நிதியில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக சந்திரபாபுவை ஆந்திர சிஐடி போலீஸார் கடந்த செப்டம்பர் 9-ம் தேதி கைது செய்தனர். தற்போது அவர் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார். 

பின்னர் நீதிமன்ற உத்தரவுப்படி ராஜமுந்திரி சிறையில் அவர் அடைக்கப்பட்டார். பின்னர் அவரை விசாரணை செய்ய போலீசாருக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியது. இதனையடுத்து கடந்த செப்டம்பர் மாதம் 23, 24-ஆம் தேதிகளில் அவரிடம் சிஐடி போலீஸாா் விசாரணை மேற்கொண்டனர்

இந்நிலையில், ஆந்திர மாநில முன்னாள் முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடுவுக்கு ஆந்திர உயர்நீதிமன்றம் நான்கு வாரங்களுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கியது என்று உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சுங்கர கிருஷ்ணமூர்த்தி தெரிவித்துள்ளார்.


 

Trending News

Latest News

You May Like