1. Home
  2. தமிழ்நாடு

#BIG NEWS: எல்லை தாண்டிய பிஎஸ்எப் வீரர்: பாக்., சிறைபிடிப்பு..!

Q

பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தின் எதிரொலியாக பாகிஸ்தானுடனான உறவை இந்தியா துண்டித்துக் கொண்டது. அந்நாட்டு தூதரக அதிகாரிகள் வெளியேறவம், அந்நாட்டினருக்கு வழங்கப்பட்ட விசாவை ரத்து செய்தும் உத்தரவிட்டு உள்ளது.

இந்நிலையில், பஞ்சாபின்பிரோஸ்பூரில் சர்வதேச எல்லைப்பகுதியில் நேற்று, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த எல்லை பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் தவறுதலாக எல்லை தாண்டி பாகிஸ்தானுக்குள் சென்றார். இதனையடுத்து அந்த வீரரை பாகிஸ்தான் ராணுவத்தினர் சிறைபிடித்து சென்றனர். இதனையடுத்து அவரை பாதுகாப்புடன் அழைத்து வர பாகிஸ்தான் அதிகாரிகளுடன் பிஎஸ்எப் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

Trending News

Latest News

You May Like