#BIG NEWS : மார்ச் 31ஆம் தேதி வங்கிகள் விடுமுறை ரத்து..!
நாடு முழுவதும் உள்ள அனைத்து வங்கிகளும் மார்ச் 31ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) செயல்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இது தொடர்பாக அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில், அரசுத் துறைகளின் கணக்குகளை பராமரிக்க வரும் 31ஆம் தேதி வங்கிகளின் விடுமுறை ரத்து செய்யப்படுவதாக கூறப்பட்டுள்ளது.
2023-24 நிதியாண்டுக்கான அரசின் நிதி விவரங்களை முடிப்பதற்காக இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.