1. Home
  2. தமிழ்நாடு

#BIG NEWS : அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தம்..!

1

அமர்நாத் பனிலிங்கத்தை தரிசனம் செய்வதற்கு வருடந்தோறும் உலகத்தில் உள்ள பல மாநிலங்களில் இருந்து பக்தர்கள் படையெடுப்பது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு கடந்த ஜூன் 28ம் தேதி யாத்திரை தொடங்கியது. இந்த யாத்திரையில் அதிகமான பக்தர்கள் கலந்து கொண்டு நடந்து சென்றனர்.

மேலும் இந்த யாத்திரை ஆகஸ்ட் 19ம் தேதி நிறைவடை இருக்கும் நிலையில், தற்போது வரை ஒரு லட்சத்திற்கும் மேலான பக்தர்கள் பனிலிங்கத்தை தரிசனம் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தற்போது அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

அதாவது நேற்று இரவு முதல் பல்டால் மற்றும் பஹல்காம் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் பக்தர்கள் பாதிக்கப்பட்டு வந்த நிலையில், அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாகவும்,  முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கும் விதமாகவும் இன்று அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

Trending News

Latest News

You May Like