1. Home
  2. தமிழ்நாடு

#BIG NEWS : நடிகர் பவன் கல்யாண் மீது கல்வீச்சு..!

1

ஆந்திராவில் மே 13-ம் தேதி சட்டமன்றத் தேர்தலும், நாடாளுமன்றத் தேர்தலும் ஒருசேர நடைபெறவுள்ளது. இதில் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்எஸ்ஆர்சிபி கட்சி தனித்து களம் காண்கிறது. சந்திரபாபு நாயுடு தலைமையில் பாஜக மற்றும் பவன் கல்யாணின் ஜன சேனா கட்சிகள் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கின்றன.

இந்நிலையில், தேர்தலுக்காக ஆந்திரா முழுவதும் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி பிரச்சாரம் செய்து வருகிறார். அந்த வகையில், விஜயவாடாவில் நேற்று இரவு (ஏப்ரல் 13) முதல்வர் ஜெகன்மோகன் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தார். அப்போது சுற்றியிருந்த பொதுமக்கள் அவர் மீது பூக்களை தூவினர். இந்நிலையில், மர்மநபர்கள் சிலர் பூக்களோடு கற்களையும் சேர்த்து கட்டி அவர் மீது எறிந்தனர். இதில் ஜெகன்மோகனின் இடது நெற்றியில் காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது.

முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி மீது கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் ஆந்திராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது 

இந்நிலையில் குண்டூர் மாவட்டம் தெனாலியில் வாராஹி யாத்திரையில் பங்கேற்றுக்கொண்டிருந்தபோது, ​​பவன் கல்யாண் மீது ஒருவர் கல் வீசினார். ஆனால் அந்தக் கல் அவர் மீது விழாமல் தள்ளி சென்று விழுந்தது. இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. இந்நிலையில் அவர் மீது கல்லை வீசி தாக்குதலில் ஈடுபட்டவர் அவரது ஜன சேனா கட்சியை சேர்ந்தவர்தான் என்றும் அவரை பிடித்து போலீசில் ஒப்படைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Trending News

Latest News

You May Like