1. Home
  2. தமிழ்நாடு

#BIG NEWS : பள்ளி பாடபுத்தகத்தில் கருணாநிதி... வரும் கல்வியாண்டு முதல் அமல்..!!

#BIG NEWS : பள்ளி பாடபுத்தகத்தில் கருணாநிதி... வரும் கல்வியாண்டு முதல் அமல்..!!

திராவிட முன்னேற்ற கழகத்தின் ஒரு பகுதியாக இருந்து, உறுப்பினர்களை நிறுவி 1969-ல் இருந்து கட்சியை வழிவகுத்து வருகிறார். சமூகப் பணியில் அவருக்கு இருந்த பேரார்வமே, தமிழ்நாட்டின் தலைச்சிறந்த முதல்வராக அவரை செயல்பட வைத்தது. 70 ஆண்டுகளாக அரசியலில் தொடர்ந்து, ஒரு வலிமையான சக்தியாக இருந்து தனது கட்சி உறுப்பினர்களையும், ஆதரவாளர்களையும் திறம்பட வழிநடத்துகிறார். மு.கருணாநிதி அன்போடு மக்களால் “கலைஞர்” என்று அழைக்கப்படுகிறார்.

தமிழ்நாட்டில் 5 முறை முதல்வராக இருந்த இவர், தமிழ்நாட்டின் மிக நீண்ட காலம் முதல்வராக இருந்தவர் என்ற பெருமையையும் பெற்றவர். முதல்வராக இருந்ததைக் கடந்து எழுத்தாளராக தமிழுக்கு பல பங்காற்றியுள்ளார். குறிப்பாக, திருக்குறளுக்கு விளக்கவுரை எழுதியது அவருடைய பங்களிப்பில் முக்கியமானதாக கருதப்படுகிறது.


#BIG NEWS : பள்ளி பாடபுத்தகத்தில் கருணாநிதி... வரும் கல்வியாண்டு முதல் அமல்..!!

இந்த நிலையில், வரும் கல்வியாண்டு முதல் கருணாநிதி குறித்த வரலாறு பள்ளி மாணவர்களின் பாடப்புத்தகத்தில் இடம்பெறவுள்ளது.

கருணாநிதி தமிழுக்கு ஆற்றிய பங்களிப்பு குறித்து பகுதி வரும் கல்வியாண்டு 9ம் வகுப்பு பாட புத்தகத்தில் இடம் பெற உள்ளது. செம்மொழியான தமிழ் மொழி என்கிற தலைப்பில் தமிழ் பாட புத்தகத்தில் கருணாநிதி தமிழ் மொழிக்கு ஆற்றிய பங்களிப்பு குறித்த பகுதி இடம் பெறுகிறது.முந்தைய திமுக ஆட்சி காலத்தின் போது முன்னாள் முதல்வர் கருணாநிதி எழுதிய தமிழ் செம்மொழி பாடல் பள்ளி பாடப்புத்தகத்தில் இடம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

Trending News

Latest News

You May Like

News Hub