1. Home
  2. தமிழ்நாடு

#BIG BREAKING : இந்தியாவுக்கு எதிராக நாம் வெற்றிபெற்றுவிட்டோம் : பாகிஸ்தான் பிரதமர் சர்ச்சை பேச்சு..!

1

அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவுறுத்தலின்படி முதலில் போர்நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்ட பாக்., மீண்டும் அதனை மீறி நேற்று மாலையில் மீண்டும் இந்தியாவின் எல்லையோர மாநிலங்களில் தாக்குதலை தொடங்கியது. இதற்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்துவருகிறது. 

இந்நிலையில், பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப் இன்று நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். 

அப்போது அவர் கூறியதாவது, எங்கள் பாதுகாப்பிற்காக நாங்கள் எதையும் செய்வோம். மசூதிகள் தாக்கி அழிக்கப்பட்டு அப்பாவிகள் உயிரிழந்தனர். பாகிஸ்தான் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. நமது ராணுவ ரீதியிலான கொள்கைகளில் நாம் வெற்றியடைந்தோம். ஒட்டுமொத்த பாகிஸ்தானும் வெற்றிபெற்றுவிட்டது, இந்தியாவுக்கு எதிராக நாம் வெற்றிபெற்றுவிட்டோம். பாகிஸ்தான் வரலாற்று சிறப்புமிக்க வெற்றிபெற்றுள்ளது. சிந்து நதி நீர் பங்கீடு, காஷ்மீர் உள்பட அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு காணப்படும் என்று நம்புகிறேன். எங்கள் நம்பகமான நண்பன் சீனாவுக்கு நன்றி. பாகிஸ்தானுக்கு தேவை ஏற்படும்போது சீனா உதவி செய்கிறது. அவர்களுக்கு நான் மிகப்பெரிய நன்றி கூறிக்கொள்கிறேன் ' என்றார்.


 


 

Trending News

Latest News

You May Like