#BIG BREAKING : குடியரசு துணைத் தலைவர் திடீர் ராஜினாமா..!
குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் திடீரென தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மருத்துவக் காரணங்களை குறிப்பிட்டுள்ளார்.
உடல்நலக் குறைவு காரணமாக அவர் பதவி விலகியதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜனாதிபதி திரௌபதி முர்முவுக்கு அவர் அளித்த ராஜினாமா கடிதத்தில், “சுகாதாரப் பராமரிப்புக்கு முன்னுரிமை அளிக்கவும், மருத்துவ ஆலோசனையைப் பின்பற்றவும், அரசியலமைப்பின் பிரிவு 67(a) இன் படி, உடனடியாக அமலுக்கு வரும் வகையில், இந்திய துணை ஜனாதிபதி பதவியை ராஜினாமா செய்கிறேன்” என்று கூறினார்.
இந்த குறிப்பிடத்தக்க காலகட்டத்தில் இந்தியாவின் குறிப்பிடத்தக்க பொருளாதார முன்னேற்றத்தையும், முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிவேக வளர்ச்சியையும் கண்டு, அதில் பங்கேற்பது ஒரு பாக்கியமாகவும் திருப்தியாகவும் இருப்பதாக தன்கர் கூறினார்.
— Vice-President of India (@VPIndia) July 21, 2025
— Vice-President of India (@VPIndia) July 21, 2025