1. Home
  2. தமிழ்நாடு

#BIG BREAKING : ஆந்திராவில் ரயில் விபத்து : நின்ற ரயில் மீது மோதி பயங்கர விபத்து..!

1

குண்டூரில் இருந்து ராயக்கட்ட சென்று கொண்டிருந்த எக்ஸ்பிரஸ் ரயில் சிக்னல் கோளாறு காரணமாக கண்டகப்பள்ளி ரயில் நிலையம் அருகே நின்று கொண்டிருந்தது. அப்போது, அதே நேரத்தில்  விசாகப்பட்டினத்தில் இருந்து பலாசா சென்று கொண்டிருந்த பேசஞ்சர் ரயில், ராயக்கட்ட ரயில் மோதி விபத்து ஏற்பட்டது. விபத்தில் ராயக்கட்ட எக்ஸ்பிரஸ் ரயிலின் மூன்று பெட்டிகள் தடம் புரண்டது.

இதையடுத்து அங்கிருந்த பயணிகள் மற்றும் ரயில்வே போலீசார் உடனடியாக மீட்பு பணியை தொடங்கினர். மேலும் ரயில்வே போலீசார், ரயில்வே அதிகாரிகள், தீயணைப்பு வீரர்களுக்கு விபத்து குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்களும் விரைந்து வந்து மீட்பு பணியை தொடங்கினர்.

அப்போது தடம் புரண்ட பெட்டியில் காயமடைந்து இருந்தவர்கள் மீட்கப்பட்டு அருகே உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அப்போது சில பயணிகள் படுகாயம் அடைந்து இருந்தனர். முதலில் 3 பயணிகள் பலியாகி இருந்த நிலையில் தற்போது பலி எண்ணிக்கை என்பது 10 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில் தான் விபத்து எப்படி நடந்தது? ஒரே நேரத்தில் 2 ரயில்கள் எப்படி தண்டவாளத்தில் வந்தன? என்பது பற்றிய திடுக்கிட வைக்கும் தகவல்கள் வெளியாகி உள்ளன. அதாவது விசாகப்பட்டினத்தில் இருந்து ராயகடா நோக்கி புறப்பட்டு சென்ற ரயில் கந்தகப்பள்ளி கிராமத்தின் அருகே சென்றபோது திடீரென்று பிரேக்கில் பிரச்சனை ஏற்பட்டது.

இதையடுத்து பாதுகாப்பு காரணங்களுக்காக அந்த ரயில் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டது. இந்த வேளையில் அந்த தண்டவாளத்தில் பாலசா எக்ஸ்பிரஸ் ரயில் வந்தது. இந்த பாலசா எக்ஸ்பிரஸ் நின்ற விசாகப்பட்டினம்-ராயகடா ரயிலின் மீது பயங்கரமாக மோதியது. இதில் ரயில் பெட்டிகள் தடம் புரண்ட நிலையில் தற்போது வரை 6 பேர் பலியாகி உள்ளனர்.

Trending News

Latest News

You May Like