1. Home
  2. தமிழ்நாடு

#BIG BREAKING : கோவிஷீல்டு போல் கோவாக்ஸின் தடுப்பூசியும் பக்க விளைவுகளை ஏற்படுத்தும்..!

1

கொரோனா தொற்றில் இருந்து நம்மை பாதுகாக்க கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் ஆகிய தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டன. இதனை மக்கள் கட்டாயம் போட்டுக்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது. கோவிஷீல்டு தடுப்பூசியை இங்கிலாந்தைச் சேர்ந்த ஆல்டிராஜெனேகா நிறுவனமும் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகமும் இணைந்து கண்டுபிடித்தன. இந்த கோவிஷீல்டு தடுப்பு ஊசியை மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் உள்ள சீரம் நிறுவனம் மத்திய அரசின் அனுமதி உடன் தயாரித்தது. இந்த தடுப்பூசியின் செயல்திறன் 70% என்று கூறப்பட்டது.

கோவாக்சின் தடுப்பூசியை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுடன் இணைந்து ஹைதராபாத்தில் உள்ள பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்தது. இந்த இரண்டு வகையான தடுப்பூசிகளும் உலக அளவில் மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது. இதனால் கொரோனா தொற்று கொரோனா பெருந் தொற்று கட்டுக்குள் வந்தது. அதே நேரத்தில் கோவிஷீல்டு தடுப்பூசியை செலுத்திக் கொண்டவர்களுக்கு திடீர் மரணம் ஏற்படுவதாகவும் உடல் நல பாதிப்பு மற்றும் பக்க விளைவுகள் ஏற்படுவதாகும் தொடர்ந்து புகார்கள் எழுந்தன.

இதை அடுத்து இந்த மருந்து கண்டுபிடித்த நிறுவனத்துக்கு எதிராக இங்கிலாந்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக ஆல்டிராஜெனேகா நிறுவனமும் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகமும் இணைந்து அறிக்கை ஒன்று தாக்கல் செய்தது. அதில் கோவிஷீல்டு தடுப்பூசி சில நேரங்களில் சிலருக்கு பக்கவிளைவுகளை ஏற்படுத்துகிறது என்றும் ரத்தத்தில் உறைதல், டிடிஎஸ் (Thrombosis with Thrombocytopenia Syndrome ) பாதிப்பு ஏற்படாலாம் என்றும் ஆனால் இது மிக அரிதாக நடக்கும் ஒன்று என்றும் தெரிவித்தது.

இதனால் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். அதே நேரத்தில்  கோவாக்சின் தடுப்பூசி பாதுகாப்பானது என அதன் தயாரிப்பு நிறுவனமான பாரத் பயோடெக் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

இந்நிலையில் இப்போது 'கோவாக்ஸின் தடுப்பூசி போட்டவர்களுக்கு உடல்நல பாதிப்பு ஏற்படலாம்' என சமீபத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.

 கோவாக்ஸின் தடுப்பூசி போட்டவர்களுக்கு சில உடல்நல பாதிப்புகள் வரலாம் என பனராஸ் ஹிந்து பல்கலைக்கழகம் கடந்த ஓராண்டாக நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.இந்த ஆய்வில் கோவாக்ஸின் போட்டுக்கொண்ட 1,024 பேர் கலந்துகொண்டுள்ளனர். இதில் 635 பேர் இளைஞர்கள், 291 பேர் நடுத்தர வயதினர் ஆவர்.

ஆய்வின் படி, கோவாக்ஸின் தடுப்பூசி போடப்பட்ட பெண்கள் மற்றும் அலர்ஜி பிரச்னை உள்ளவர்கள் உடல்நல கோளாறுகளால் அதிகம் பாதிக்கப்படலாம் என்று தெரியவந்துள்ளது. மேலும், இந்த ஆய்வில் கலந்துகொண்ட 47.9 சதவிகித இளைஞர்கள் மற்றும் 42.6 சதவிகித நடுத்தர வயதினருக்கு சுவாசக் கோளாறுகள் ஏற்பட்டுள்ளதும் கண்டறியப்பட்டுள்ளது.

10.5 சதவிகிதம் பேருக்கு தோல் சம்பந்தமான நோய்களும், 4.7 சதவிகிதம் பேருக்கு நரம்பு சம்பந்தமான கோளாறுகளும், 10.2 சதவிகிதம் பேருக்கு பொதுவான பிரச்னைகளும் ஏற்பட்டுள்ளன.

5.8 சதவிகிதம் பேருக்கு தசை சம்பந்தமான பிரச்னைகளும், 5.5 சதவிகிதம் பேருக்கு நரம்பு சம்பந்தமான பிரச்னைகளும், 8.9 சதவிகிதம் பேருக்கு பொதுவான பிரச்னைகளும் ஏற்பட்டுள்ளன.

முக்கியமாக இந்த ஆய்வில் நடுத்தர வயதினருக்கு 1.6 சதவிகிதமும், பெண்கள் மற்றும் அலர்ஜி பிரச்னை உள்ளவர்களுக்கு 2.8 சதவிகிதமும் உடல்நல பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளதெனக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like