#BIG BREAKING : லஷ்கர்-இ-தொய்பா தளபதி சுட்டுக்கொலை..!

பஹல்காமில் இருந்து 144 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பண்டிபோராவில் சந்தேகத்துக்கு இடமாக சிலரது நடவடிக்கை இருப்பதாக ராணுவ வீரர்களுக்குத் தகவல் வந்தது.
இதைத்தொடர்ந்து பண்டிபோராவில் ராணுவ வீரர்கள் அங்குலம் அங்குலமாக சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு மறைந்திருந்த பயங்கரவாதிகள் சிலர், ராணுவ வீரர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.
இதனால் சுதாரித்துக் கொண்ட ராணுவ வீரர்கள், பயங்கரவாதிகளை நோக்கி பதிலடி கொடுத்தனர். சில மணிநேரம் நீடித்த இந்த சண்டையில், பயங்கரவாதி ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார்.
விசாரணையில் அவர் லஷ்கர்-இ- தொய்பா அமைப்பைச் சேர்ந்த தளபதி அத்லஃப் லல்லி என்பது தெரியவந்தது. மேலும், அவர்தான் பஹல்காம் தாக்குதலுக்கு காரணமான பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் அளித்ததாக கூறப்படுகிறது.