#BIG BREAKING : தேர்தல் தேதி அறிவிப்பு..!
15 மாநிலங்களில், 56 மாநிலங்களவை இடங்களுக்கு தேர்தல் தேதியை அறிவித்தது இந்திய தேர்தல் ஆணையம்.
15 மாநிலங்களில் காலியாகவுள்ள 56 ராஜ்ய சபா உறுப்பினர் பதவிகளுக்கு வருகின்ற பிப்ரவரி 27ம் தேதி தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
உத்தரப் பிரதேசம், பீகார், ஆந்திரா, மத்தியப்பிரதேசம் உள்ளிட்ட 15 மாநிலங்களில் உள்ள 56 மாநிலங்களவை இடங்களுக்கு தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. பிப். 8 வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது, பிப்.15 வேட்புமனு தாக்கல் நிறைவடைகிறது. பிப்.27ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. அதிகபட்சமாக உ.பியில் 10 இடங்களுக்கும், ம.பி, மேற்கு வங்கத்தில் தலா 5 இடங்களிலும் தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
#JustIn | உத்தரப் பிரதேசம், பீகார், ஆந்திரா, மத்தியப்பிரதேசம் உள்ளிட்ட 15 மாநிலங்களில், 56 மாநிலங்களவை இடங்களுக்கு தேர்தல் தேதியை அறிவித்தது இந்திய தேர்தல் ஆணையம்#SunNews | #Rajyasabha pic.twitter.com/AiB3tgEGIa
— Sun News (@sunnewstamil) January 29, 2024