1. Home
  2. தமிழ்நாடு

#BIG BREAKING : கண்ணிவெடி தாக்குதல்: 9 சிஆர்பிஎப் வீரர்கள் வீர மரணம்...!

Q

நக்சலைட்டுகளுக்கு எதிரான கூட்டு நடவடிக்கைகளில் சிஆர்பிஎப் வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனா். அந்த வகையில் கூட்டு பயிற்சியை முடித்துவிட்டு திரும்பும் வழியில் மாவோயிஸ்ட்கள் நடத்திய கோர தாக்குதலில் 9 பாதுகாப்பு படை வீரர்கள் வீர மரணமடைந்துள்ளனா்.

 

சத்தீஸ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்ட்கள், சிஆர்பிஎம் வீரர்கள் சென்ற வாகனம் மீது தாக்குதல் நடத்தினா். பாதுகாப்பு படை வீரர்கள் வாகனத்தில் சென்றபோது, மாவோயிஸ்ட்கள் வைத்த கண்ணிவெடி வெடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மாவோயிஸ்ட்டின் இந்த தாக்குதலில் 9 சிஆர்பிஎப் வீரர்கள் வீரமரணம் அடைந்துள்ளனா்.

 

இந்த சம்பவத்தை தொடர்ந்து அந்த பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் கண்ணிவெடி வெடித்த பகுதியில் சுமார் 10 அடி பள்ளம் ஏற்பட்டதாக விசாரணை குழு கூறி உள்ளது.

Trending News

Latest News

You May Like