#BIG BREAKING: பாகிஸ்தானியர்கள் 48 மணி நேரத்தில் இந்தியாவை விட்டு வெளியேற உத்தரவு..!

பயங்கரவாத தாக்குதலை அடுத்து ஒன்றிய அரசு பல முக்கிய முடிவுகளை எடுத்துள்ளது. இதுகுறித்து செய்தியாளருக்கு சற்று முன் பேட்டி அளித்த ஒன்றிய வெளியுறவு செயலர் விக்ரம் மிஷ்ரி, "இந்தியா பாகிஸ்தான் பகுதிகளான அட்டாரி வாகா எல்லை உடனடியாக மூடப்படுகிறது.
பாகிஸ்தானுடனான சிந்து நதி ஒப்பந்தம் ரத்து செய்யப்படுகிறது. அங்குள்ள இந்திய தூதரகம் மூடப்படுகிறது" என அறிவித்துள்ளார்.
இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்கள் 48 மணி நேத்தில் வெளியேற மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. பாகிஸ்தான் அதிகாரிகள் ஒரு வாரத்தில் வெளியேறவும் உத்தரவு. வாகா எல்லையை உடனடியாக மூடவும், சிந்து நிதி ஒப்பந்தத்தை தற்காலிகமாக நிறுத்தி வைக்கவும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.