#BIG BREAKING: அமைச்சர் செந்தில் பாலாஜி ராஜினாமா..?

தமிழக சட்டப்பேரவையில் இன்றைய கூட்டத்தொடரில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு பதிலாக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி மசோதா தாக்கல் செய்தார்.
மருத்துவ கழிவுகளை கொட்டினால் சிறை தண்டனை விதிக்கும் மசோதாவை அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்வதாக இருந்தது. தற்போது அவருக்கு பதில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதியே தாக்கல் செய்துள்ளார். 29ஆம் தேதி மசோதா மீது விவாதம் நடைபெறும் சூழலில் மசோதா தாக்கலானது. அமைச்சர் பதவியில் இருந்து செந்தில் பாலாஜி ராஜினாமா செய்யவுள்ளதாக தகவல் வெளியான நிலையில், மசோதா தாக்கல் செய்வதிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஜாமீனா? அமைச்சர் பதவியா? என உச்சநீதிமன்றம் செந்தில் பாலாஜிக்கு கேள்வியெழுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.