1. Home
  2. தமிழ்நாடு

ஐபிஎல் போட்டிகளில் இருந்து வெளியேறுகிறார் புவனேஷ்வர் குமார்!

ஐபிஎல் போட்டிகளில் இருந்து வெளியேறுகிறார் புவனேஷ்வர் குமார்!


ஐதராபாத் அணியின் ஸ்டார் ப்ளேயரான புவனேஷ்வர் குமார் நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து விலக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஹைதராபாத் அணியின் அனுபவ வீரரான புவனேஷ்வர் குமாருக்கு சென்னை அணியுடனான லீக் ஆட்டத்தில் பத்தொன்பதாவது ஓவரை வீசிய போது காயம் ஏற்படட்து. ஒரு பந்து மட்டுமே வீசிய நிலையில் அந்த போட்டியிலிருந்து அவர் விலகினார்.

அதனைத் தொடர்ந்து மும்பை இந்தியன்ஸ் அணியுடனான ஆட்டத்திலும் விளையாடவில்லை. காயம் சரியாகி புவனேஷ்வர் குமார் அடுத்த போட்டியில் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இடுப்பில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் எஞ்சியுள்ள போட்டிகளில் விளையாடமாட்டார் என சொல்லப்பட்டுள்ளது.

முன்னதாக ஹைதராபாத் அணிக்காக விளையாட இருந்த மிட்சல் மார்ஷும் காயம் காரணமாக வெளியேறியிருந்தார். அடுத்தடுத்து இரண்டு வீரர்களை ஒரே சீஸனில் ஹைதராபாத் இழந்துள்ளது பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

newstm.in

Trending News

Latest News

You May Like