1. Home
  2. தமிழ்நாடு

இன்று இந்தியா வருகிறார் பூடான் பிரதமர் டோப்கே..!

1

பூடான் பிரதமராக கடந்த ஜனவரி மாதம் ஷேரிங் டோப்கே பதவியேற்றார். அதன் பிறகு தனது முதல் வெளிநாட்டுப் பயணமாக ஷேரிங் டோப்கோ இன்று இந்தியா வருகிறார். 

டெல்லி வரும் ஷேரிங் டோப்கோ பிரதமர் மோடியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார். அதேபோல், ஜனாதிபதி திரவுபதி முர்முவையும் டோப்கோ சந்தித்து பேசுகிறார். 

5 நாள் பயணமாக இந்தியா வரும் டோப்கோ தனது பயணத்தின் போது அவர் மும்பைக்கும் செல்கிறார்.  டோப்கேவுடன்   அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் உள்ளிட்ட  உயர்மட்டக் குழுவும் வருகிறது.

இந்த நிலையில் இந்தியாவும், பூடானும் அனைத்து மட்டங்களிலும் நம்பிக்கை, நல்லெண்ணம் மற்றும் பரஸ்பர புரிதல் ஆகியவற்றின் அடிப்படையில் நட்பு  கொண்டு இருப்பதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

Trending News

Latest News

You May Like