1. Home
  2. தமிழ்நாடு

மக்களே உஷார்..! ரயிலில் பட்டாசு கொண்டு சென்றால் அபராதம்..!

1

சென்னை சென்ட்ரல் மற்றும் எழும்பூர் ரயில் நிலையங்களில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்புகளை ஆய்வு செய்த ரயில்வே எஸ்.பி.சுகுனா, பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், பட்டாசு உள்ளிட்ட பொருட்களை ரயில்களில் எடுத்துச் செல்ல அனுமதி இல்லை என்றும், அவ்வாறு கொண்டு வந்தால் 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சுகுணா சிங் தெரிவித்தார்.

கடந்த 3 நாட்களாக ரயில் நிலையங்களில் திருடு போன 100 செல்போன்கள் மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மாநிலம் முழுவதும் ரயில் நிலையங்களில் 1,300 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தடையை மீறி பட்டாசுகளை எடுத்துச் செல்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார். 

தீபாவளி பண்டிகையை ஒட்டி ஏராளமானோர் ரயிலில் பயணிக்க முன்பதிவு செய்துள்ளதால், ரயில் நிலையங்களில் கூடுதல் போலீஸார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

Trending News

Latest News

You May Like