1. Home
  2. தமிழ்நாடு

மக்களே உஷார்..! 2 நாட்களுக்கு ஆரஞ்சு அலர்ட் அறிவிப்பு..!

1

தமிழ்நாட்டில் ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக வரலாறு காணாத மழைப்பொழிவு ஏற்பட்டது. இதன் காரணமாகச் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிகக் கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை மீட்கவும், அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்கிடவும் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் சென்னை உள்ளிட்ட மழை பாதித்த இடங்களில் வெள்ள நீர் வெளியேற்றப்பட்டு, பல இடங்களில் மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்லத் திரும்பி வருகின்றனர்.

இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களில் நாளை, நாளை மறுநாள் மீண்டும் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. அதன்படி,தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் நாளை, நாளை மறுநாள் என 2 நாட்கள் ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது,

மேலும் , ஓரிரு இடங்களில் 12-20 செ.மீ. மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது..  

அதே போல் கேரளாவிலும் நாளை மறுநாள் (டிச.17) மிக கனமழைக்கு வாய்ப்பு என தகவல் வெளியாகியுள்ளது.
 

Trending News

Latest News

You May Like