1. Home
  2. தமிழ்நாடு

மக்களே உஷார்..! அடுத்த மூன்று மணி நேரத்திற்கு 23 மாவட்டங்களில் வெளுக்க போகும் மழை..!

1

தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, 16.10.2023:தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருநெல்வேலி மாவட்டத்தின் மலைப்பகுதிகள், கன்னியாகுமரி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தூத்துக்குடி, இராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது.

tn


இந்நிலையில் மாலை 4 மணி வரை நீலகிரி, கோயம்புத்தூர் ,திருச்சி, பெரம்பலூர், அரியலூர் ,கள்ளக்குறிச்சி, சேலம் ,நாமக்கல், தர்மபுரி ,தஞ்சாவூர் ,திருவாரூர் ,நாகப்பட்டினம் ,மயிலாடுதுறை, புதுக்கோட்டை ,கடலூர் ,விழுப்புரம் ,திருவண்ணாமலை ,ராணிப்பேட்டை ,வேலூர் ,திருவள்ளூர் ,காஞ்சிபுரம், சென்னை மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் லேசான முதல் மிதமானது வரை இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

Trending News

Latest News

You May Like