1. Home
  2. தமிழ்நாடு

மக்களே உஷார்..! வங்கக்கடலில் உருவாகும் புயல் வடதமிழ்நாட்டை நோக்கி நகரும்..!

1

வங்கக்கடலில் டிச.2ம் தேதி புயல் உருவாகும் என கணிக்கப்பட்ட நிலையில், 3ம் தேதி புயல் உருவாகும் என்று கூறப்பட்டு அதற்கு மிக்ஜாம் புயல் என்று பெயரிடப்பட்டுள்ளது.இந்த புயல் வடதமிழ்நாட்டை நோக்கி நகரும் என்று இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது.

இந்தநிலையில், இந்த புயல் வடதமிழ்நாடு மற்றும் தெற்கு ஆந்திராவை நோக்கி நகர்ந்து, 4ம் தேதி அதிகாலை புயலாகவே கரையை கடக்கும். இதனால், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்கள் புயலில் சிக்க அதிக வாய்ப்புள்ளது. எனவே மக்கள் தயாராக இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்நிலையில், டிச.1-4ம் தேதி வரை பெய்யவுள்ள கனமழையை எதிர்கொள்ள தமிழக அரசு தயாராக உள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். 

Trending News

Latest News

You May Like