1. Home
  2. தமிழ்நாடு

பீர் விலை மீண்டும் உயர்வு..!

1

மதுபானம் விலை உயர்வு தொடர்பான அறிவிப்பை முதலமைச்சர் சித்தராமையா பட்ஜெட்டில் வெளியிட்டிருந்தார். இந்த நிலையில், மதுபானத்தின் விலையை குவாட்டருக்கு 10 முதல் 15 ரூபாய் உயர்த்த உள்ளதாக ஆயத்துறை நேற்று மதியம் அறிவித்துள்ளது. அதோடு, பீரின் விலையும் 10 சதவிகிதம் உயர உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, பெங்களூருவில் அத்தியாவசிய பொருட்களின் விலை உச்சத்தை தொட்டுள்ள நிலையில், தற்போது மதுபானத்தில் விலை உயர்த்தப்பட்டிருப்பது பெங்களூருவாசிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

நாட்டின் முக்கிய நகரங்களில் ஒன்றாக உள்ள பெங்களூரு, இந்தியாவின் தகவல் மற்றும் தொழில்நுட்பத்துறையின் தலைநகராக திகழ்கிறது. இந்தியாவின் சிலிக்கான் வேலி என அழைக்கப்படுகிறது. வேலைவாய்ப்பு, உள்கட்டமைப்பு என தலைசிறந்து விளங்கும் பெங்களூரு, நாட்டின் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றுகிறது. டெல்லி, மும்மை, கொல்கத்தாவுக்கு பிறகு, அதிக மக்கள் தொகை கொண்ட நகரங்களில் ஒன்றாக உள்ளது.

தொடர்ந்து வளர்ச்சி அடைந்து வரும் அதே சமயத்தில், பெங்களூருவில் விலைவாசி உயர்வும் விண்ணை முட்டும் அளவில் உள்ளது. கர்நாடகாவில் முழுவதுமே அத்தியாவசிய பொருட்களின் விலை உச்சத்தை தொட்டிருக்கிறது. கடந்த 3 மாதங்களில் பால், டீசல், மின் கட்டணம், பேருந்து மற்றும் மெட்ரோ ரயில் கட்டணம் ஆகியவற்றின் விலை உயர்த்தப்பட்டது. 

அதன் தொடர்ச்சியாக, மதுபானத்தின் விலையும் உயர்த்தப்பட உள்ளதாக கர்நாடக அரசு அறிவித்துள்ளது. மதுபானம் விலை உயர்வு தொடர்பான அறிவிப்பு கர்நாடக பட்ஜெட்டில் இடம்பெற்றிருந்தது. இந்த நிலையில், மதுபானத்தின் விலையை குவாட்டருக்கு 10 முதல் 15 ரூபாய் உயர்த்த உள்ளதாக கலால் துறை நேற்று மதியம் அறிவித்துள்ளது. அதோடு, பீரின் விலையும் 10 சதவிகிதம் உயர உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதுகுறித்து ஆயத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், "மாநிலத்திற்கான கலால் வரி வசூலையும், கலால் துறைக்கு ரூ.40,000 கோடி இலக்கு நிர்ணயித்ததையும் கருத்தில் கொண்டு, மதுபானங்களின் விலையை உயர்த்த முடிவு செய்யப்பட்டது. அண்டை மாநிலங்களின் மதுபான விலைக்கு இணையாக கர்நாடகாவிலும் மதுபான விலையை உயர்த்த இந்த முடிவு எடுக்கப்பட்டது" என்றார்.

மதுபான விலை உயர்வு குறித்து ஆயத்துறை வெளியிட்ட அறிவிப்பில், "பீர், கள், ஒயின் மற்றும் ஃபென்னி ஆகியவை இல்லாமல் பிராந்தி, விஸ்கி, ஜின், ரம் மற்றும் பிற மதுபானங்களின் விலை குவாட்டருக்கு ரூ.10-15 வரை உயர்த்தப்பட முடிவு செய்யப்பட்டுள்ளது. மிட் செக்மென்ட் மதுபானத்தின் விலையும் கணிசமாக உயர்த்தப்பட்டுள்ளன. அனைத்து பிரிவுகளிலும் பீர் விலையை 10% உயர்த்த முன்மொழியப்பட்டுள்ளது" என குறிப்பிடப்பட்டுள்ளது.

உயர் ரக மதுபானங்களின் விலையில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. தமிழ்நாடு உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் கர்நாடகாவில் இருந்து எடுத்து வரப்படும் மதுபானங்களை விற்பனை செய்ய அனுமதி வழங்கப்படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News

Latest News

You May Like