இன்று நடைபெறவிருந்த பிஎட்., கலந்தாய்வு ஒத்தி வைப்பு..!

கனமழை எச்சரிக்கையைடுத்து, சென்னையில் இன்று அக்டோபர் 15ம் தேதி செவ்வாய்க்கிழமை நடைபெறவிருந்த பி.எட் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி பி.எட் (தாவரவியல், விலங்கியல், வேதியியல், இயற்பியல்) மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு தேதியினை மாற்றம் செய்து கல்லூரிக் கல்வி ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இது குறித்து கல்லூரிக் கல்வி ஆணையர் “சென்னை, லேடி வில்லிங்கடன் கல்வியியல் கல்லூரியில் நாளை அக்டோபர் 15ம் தேதி நடைபெற இருந்த பி.எட் (தாவரவியல், விலங்கியல், வேதியியல், இயற்பியல்) மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு கனமழை காரணமாக அக்டோபர் 21ம் தேதி திங்கட்கிழமை நடைபெறும் என தெரிவித்துள்ளார்.
கனமழை எச்சரிக்கை வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி வலுப்பெற்று வடதமிழக கடலோரப் பகுதியை நோக்கி அடுத்த 48 மணிநேரத்தில் நகரும் என கணிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, தமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் அடுத்து வரும் ஓரிரு நாள்களில், அதி கனமழை பெய்யும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.