1. Home
  2. தமிழ்நாடு

மசாஜ் சென்டரில் அழகிகள்.. இளைஞர்கள் குவிந்ததால் அம்பலமான மஜா !

மசாஜ் சென்டரில் அழகிகள்.. இளைஞர்கள் குவிந்ததால் அம்பலமான மஜா !


திருச்சி நகரில் பகுதியில் ஸ்பா மற்றும் ஆயுர்வேத மசாஜ் சென்டர்கள் என்ற பெயரில் பாலியல் தொழில் நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இந்த தகவலின் படி, மாநகர காவல் ஆணையர் லோகநாதன் உத்தரவின் பெயரில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது இருவேறு ஆயுர்வேத மற்றும் மசாஜ் சென்டரில் பாலியல் தொழில் நடப்பதை அவர்கள் உறுதி செய்தனர்.

அதன்படி சம்மந்தப்பட்ட ஸ்பா மற்றும் ஆயுர்வேத மசாஜ் சென்டர்களில் புகுந்து அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையின் போத அங்கு பாலியல் தொழில் நடப்பது உறுதியானது. இதில் இளம்பெண்களை வைத்து ஒரு கும்பல் இத்தொழிலை நடத்தி வந்ததும் விசாரணையில் தெரியவந்தது.

இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக 5 பேரை போலீசார் இதுவரை கைது செய்துள்ள நிலையில், பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வந்த 10 பெண்களை மீட்டனர். மேலும் தப்பியோடிய முக்கிய குற்றவாளியை போலீசார் தேடி வருகின்றனர்.

மசாஜ் சென்டரில் அழகிகள்.. இளைஞர்கள் குவிந்ததால் அம்பலமான மஜா !

பாலியல் தொழிலில் ஈடுபட்டு மீட்கப்பட்ட பெண்கள் பத்து பேரும் அரசு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர். நகரங்களின் பல பகுத்திகளில் பாலியல் தொழில்கள் நடைப்பதாக புகார் எழுந்துள்ள நிலையில் அதனை கண்காணித்து நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்துள்ளது.

newstm.in

Trending News

Latest News

You May Like