1. Home
  2. தமிழ்நாடு

ரெடியா இருங்க மக்களே.. வீட்டுக்கே வரும் ரேஷன் கடை..!

1

சென்னையில் தமிழ்நாடு முதலமைச்சர் தாயுமானவர் திட்டத்தின் கீழ், 70 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களை மட்டுமே கொண்ட குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் மாற்றுத் திறனாளி குடும்ப அட்டைதாரர்கள் வீடுகளுக்கே சென்று பொது விநியோகத் திட்ட பொருட்கள் விநியோகம் செய்யப்படவுள்ளது.

சம்பந்தப்பட்ட நியாயவிலைக் கடைகளின் அறிவிப்புப் பலகையிலிருந்து விநியோகத் தேதியினை பொதுமக்கள் அறிந்து கொள்ளலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. இந்தத் திட்டத்தினை மேற்குறிப்பிட்ட பயனாளிகள் பயன்படுத்திக் கொள்ள அரசு தரப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. தமிழக அரசு வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பால் பயனாளிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இந்த செப்டம்பர் மாதத்தில் முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம் செயல்படும் நாட்கள் குறித்த பட்டியலை தமிழக அரசு தற்போது வெளியியிட்டுள்ளது. அதன்படி, சென்னை பெருநகராட்சி மண்டலத்தில் செப்டம்பர் 13, 14, 15 ஆகிய தேதிகளில் தொடர்ந்து மூன்று நாட்கள் மாதவரம், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், வளசரவாக்கம், அடையாறு, பெருங்குடி மற்றும் சோழிங்கநல்லூர் ஆகிய பகுதிகளில் செயல்படுத்தப்படும்.

அதேபோல, செப்டம்பர் 13, 14, 15, 16 ஆகிய தேதிகளில் தொடர்ந்து நான்கு நாட்கள் திருவொற்றியூர், மணலி, தண்டையார்பேட்டை, இராயபுரம், திரு.வி.க நகர், அம்பத்தூர். அண்ணா நகர் மற்றும் ஆலந்தூர் ஆகிய பகுதிகளில் நடைபெறும் என்றும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

Trending News

Latest News

You May Like