உஷாரா இருங்க மக்களே..! இணையத்தில் அதிகரிக்கும் போலி சைபர் க்ரைம் கணக்குகள்!

சைபர் கொள்ளையர்களிடம் சிக்கிக்கொள்பவர்கள் , தப்பிப்பதற்கு சைபர் குற்றப்பிரிவு போலீசாரை நாடுகின்றனர். ஆனால், தற்போது காவல்துறையினரையே சைபர்கொள்ளையர்கள் கதறவைத்திருக்கிறார்கள்.
”சார் நிம்பல் கார்டு மேலே இருக்குது நாளு நம்பர் சொல்லுது சார் , உங்களுக்கு கார் பரிசா விழுந்துருக்கு மேடம் “ இப்படி பேங்க் மேனேஜர் , போலீஸ் என விதவிதமான கெட்டப்பில் உலாவரும் சைபர் கொள்ளையர்கள் பல வழிகளில் மக்களின் பணத்தை கொள்ளையடித்து வருகின்றனர்.
loas , cambodia என உலகம் முழுவதும் பரவியிருக்கும் சைபர் கொள்ளையர்கள் HR , admin , manager வைத்து corporate நிறுவனத்தையே நடத்திவருகின்றனர். Loan app scam , E- challan scam , Digital arrest scam எனச் சமீபத்தில்கூட சைபர் கொள்ளையர்களின் குற்றப்பின்னணியை நமது தமிழ் ஜனம் தொலைக்காட்சியில் பதிவுச் செய்திருந்தோம்.
ஜிப்லி டிரெண்ட் போல் சீசனுக்கு சீசன் புதுப்புது யுக்திகளில் கொள்ளையடித்து டிரெண்டாகும் சைபர் கொள்ளையர்கள் ஆட்டைக்கடித்து மாட்டைக்கடித்து கடைசியில் மனிதரையே கடித்ததுபோல் சைபர் குற்றங்களைத் தடுக்கும் காவல்துறையினரையே கலங்கடித்திருக்கிறார்கள்.
ஒன்றல்ல ரெண்டல்ல… தமிழக காவல்துறையின் சைபர் கிரைம் பிரிவின் அதிகாரப்பூர்வ பக்கம்போலவே 10 instagram account , 4 X வலைதள account என அச்சுஅசலாக காப்பி அடித்து போலி கணக்குகளை உருவாக்கி இயக்கிவருகின்றனர்… இதனால் ஆன்லைனில் சைபர் குற்ற வழக்குகளை பதிவுச்செய்யும் பொதுமக்கள் காவல்துறையின் Official account என நினைத்து போலிக்கணக்குகளில் பதிவுச் செய்கின்றனர். இதனால் ஏற்கனவே சைபர் கொள்ளையர்களிடம் பணத்தை இழந்த பொதுமக்கள் காவல்துறை என நினைத்து மீண்டும் அவர்களிடமே சென்று சிக்கிக்கொள்கின்றனர்.
இதனையடுத்து சுதாரித்துக்கொண்ட சைபர் கிரைம் பிரிவின் கூடுதல் காவல் துறை இயக்குநர் சந்தீப் மிட்டல் @tncybercrimeoff என்ற ஒரே ஒரு account-தான் தங்களுக்கென்று instagram , facebook மற்றும் x பக்கத்தில் இருப்பதாக அறிக்கை வெளியிட்டு மக்களை எச்சரித்திருக்கிறார்… மேலும் பொதுமக்கள் தமிழக சைபர் கிரைம் காவல்துறையின் சாயலில் இருக்கும் போலிக் கணக்குகளை நம்ப வேண்டாம் என்றும் தெரிவித்திருக்கிறார்.