இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்லாது - பி.சி.சி.ஐ. அறிவிப்பு..!

இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், நேபாளம் ஆகிய 6 அணிகள் பங்கேற்கும் ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஆகஸ்ட் 31 முதல் செப்டம்பர் 17ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
இதற்கிடையே, பாகிஸ்தானில் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்றால் அதில் பங்கேற்க மாட்டோம் என பி.சி.சி.ஐ. அறிவித்திருந்தது. இந்நிலையில், இந்தியா, பாகிஸ்தான் இடையேயான ஆசிய கோப்பை போட்டிகள் இலங்கையில் நடைபெறும் என ஐ.பி.எல். தலைவர் அருண் துமால் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அருண் துமால் கூறுகையில், ஆசியகோப்பைக்கான அட்டவணை இறுதி செய்யப்பட்டது. பாகிஸ்தானில் லீக் ஆட்டத்தில் 4 போட்டிகள் இருக்கும். இலங்கையில் இந்தியா, பாகிஸ்தான் போட்டி உள்பட 9 ஆட்டங்கள் இருக்கும்.ஒருவேளை இரு அணிகளும் இறுதிப் போட்டியில் மோதினால் மூன்றாவது ஆட்டம் இருக்கும் என தெரிவித்தார். 2010-ம் ஆண்டு போலவே இலங்கையின் தம்புல்லா மைதானத்தில் பாகிஸ்தானுடன் இந்திய அணி மோதும்.
பாகிஸ்தானில், நேபாளம்-பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான்-வங்கதேசம், வங்கதேசம்-இலங்கை மற்றும் இலங்கை-ஆப்கானிஸ்தான் ஆகிய 4 லீக் போட்டிகள் பாகிஸ்தானில் நடைபெறும்.