தர்மத்திற்கும் அதர்மத்திற்கும் இடையிலான போர் - ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்..!

டெல்லியில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பகவத்,’’ இந்து மதத்தில் அகிம்சை கொள்கைகள் நீண்ட காலமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்த கொள்கைகளைப் பலர் முழு மனதுடன் ஏற்றுக்கொண்டு உள்ளனர். ஆனால் சிலர் இந்த கொள்கைகளை ஏற்காமல் மறாமல் பிரச்னையை தூண்டிவிடுகின்றனர். மேலும் அகிம்சை என்பது இந்து மதத்தின் முக்கிய கொள்கை. அதே நேரத்தில், எதிரிகளை எதிர்கொண்டு வீழ்த்தாமல் இருப்பதும் தர்மத்தின் ஒரு பகுதி ஆகும்.இந்தியா தனது அண்டை நாடுகளை அவமதிப்பதோ அல்லது தீங்கு செய்வதோ இல்லை. ஆனால் யாராவது தீயவர்களாக மாறினால், வேறு என்ன வழி? மக்களைப் பாதுகாப்பது மக்களைக் காப்பதே அரசனின் கடமை.
அரசன் தனது கடமையைச் செய்தாக வேண்டும்.மதம் என்பது உண்மை, தூய்மை, கருணை மற்றும் ஆன்மீக ஒழுக்கம் ஆகிய நான்கு 4 கொள் கைகளைப் பின்பற்றாதவரை இந்துமதம் அவரை ஏற்காது. மேலும் இந்து மதத்தில் உயர்ந்தவர், தாழ்ந்தவர் என்ற பாகுபாடு இல்லை கிடையாது .தீண்டாமை மற்றும் பாகுபாடு தர்மத்திற்கு எதிரானவை என்று அவர் கூறினார்.மேலும் இந்து மதம் வன்முறையை போதிப்பது கிடையாது. அதே சமயம் எதிரிகளை விழ்த்துவது குறித்து எடுத்துரைக்கிறது. மதத்தின் உண்மையான அர்த்தத்தை உணர்ந்து, பிற மதங்களை மதிக்க வேண்டும் என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர்,’ஜம்மு காஷ்மீரின் பாஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். அவர்களில் பெரும்பாலானோர் சுற்றுலா பயணிகள்.இந்த தாக்குதல் தர்மத்திற்கும் (நீதி) அதர்மத்திற்கும் (அநீதி) இடையிலான போரை நினைவுப்படுத்துவதாக கூறினார். மற்றொரு நிகழ்ச்சியில் பேசிய அவர், தாக்குதல் நடத்தியவர்கள் மக்களின் மதத்தைப் பற்றி கேட்டறிந்த பின்னரே சுட்டுக் கொன்றனர். இந்துக்கள் அப்படி செய்ய மாட்டார்கள். அது நமது இயல்பு அல்ல. வெறுப்பும் விரோதமும் நமது கலாச்சாரத்தின் ஒரு பகுதி அல்ல. அதே நேரத்தில் தீங்கை அமைதியாக சகித்துக் கொள்வதும் கிடையாது என்று கூறினார்.