1. Home
  2. தமிழ்நாடு

இந்தியாவின் பல்வேறு இடங்களில் வங்கிகளுக்கு விடுமுறை..!

1

ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள வங்கிகளுக்கான விடுமுறைப் பட்டியலின்படி, டிசம்பர் 24ஆம் தேதி (செவ்வாய்கிழமை) கிறிஸ்துமஸ் ஈவ் அன்று கோஹிமா மற்றும் ஐஸ்வாலில் அனைத்து வங்கிகளும் மூடப்பட்டிருக்கும். இதையடுத்து டிசம்பர் 25ஆம் தேதி (புதன்கிழமை) கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி நாடு முழுவதும் தேசிய விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் உள்ள அனைத்து வங்கிகளும் டிசம்பர் 25 அன்று மூடப்பட்டிருக்கும். இதற்குப் பிறகு, டிசம்பர் 26ஆம் தேதியன்று ஐஸ்வால், கோஹிமா மற்றும் ஷில்லாங்கில் வங்கிகள் மூடப்பட்டிருக்கும். அதைத் தொடர்ந்து டிசம்பர் 27ஆம் அன்று கோஹிமாவில் வங்கிகள் மூடப்பட்டிருக்கும். டிசம்பர் 28ஆம் தேதி மாதத்தின் நான்காவது சனிக்கிழமையாகும். இதன் காரணமாக வெவ்வேறு மாநிலங்களில் வங்கிகள் மூடப்பட்டிருக்கும். மேலும், நாடு முழுவதும் உள்ள வங்கிகளுக்கு டிசம்பர் 29ஆம் தேதியன்று ஞாயிறு வார விடுமுறை வருகிறது.

டிசம்பர் 30ஆம் தேதி கோஹிமாவில் வங்கிகள் மூடப்பட்டிருக்கும். டிசம்பர் 31ஆம் தேதி காங்டாக், ஐஸ்வால் ஆகிய இடங்களில் வங்கிகள் மூடப்பட்டிருக்கும். இந்தியாவில் ரிசர்வ் வங்கி, வணிக வங்கிகள், கூட்டுறவு வங்கிகள், பிராந்திய கிராமப்புற வங்கிகள் (RRB) உள்ளன. மேலும் சிறு நிதி வங்கிகளும் (SFB) இருக்கின்றன. வங்கிகள் அனைத்து தேசிய விடுமுறை நாட்களையும் கடைபிடிக்கின்றன. எனவே அன்றைய நாட்களில் நாடு முழுவதும் வங்கிகளுக்கு விடுமுறை வரும். இது தவிர, ஒவ்வொரு மாதமும் இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகளிலும் வங்கிகள் மூடப்படும்.

வங்கிகளின் விடுமுறை தொடர்பான பட்டியலை பொதுமக்கள் முன்கூட்டியே தெரிந்துகொள்வது நல்லது. ஏனெலில், வங்கி தொடர்பான ஏதேனும் வேலைகளை முடிக்க வங்கிக்குச் செல்வதாக இருந்து, விடுமுறை நாளில் சென்றால் வீண் அலைச்சல் ஏற்படும். எனவே முன்கூட்டியே தெரிந்து கொண்டு அதன்படி திட்டமிடுவது நல்லது. 

Trending News

Latest News

You May Like